பாடல் எண் : 12
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே .
பொழிப்புரை:
வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.
குறிப்புரை:
"புறப்பட்டுப் போகான்" என்றது `தியானம் சலியாது' என்றவாறாம். எனவே, "இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்" என்பது போந்தது.இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.
Transliteration:
pu'rappaddup pukkuth thirikin'ra vaayuvai
:ne'rippada u'l'lae :ninmala maakkil
u'ruppuch sivakkum uroamang ka'rukkum
pu'rappaddup poakaan purisadai yoanae
Translation:
The breath within rises
And wanders as it lists;
Control that and purify within;
Then shall your limbs glow red
Your hair turn dark
And God within shall leave you never.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே .
பொழிப்புரை:
வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.
குறிப்புரை:
"புறப்பட்டுப் போகான்" என்றது `தியானம் சலியாது' என்றவாறாம். எனவே, "இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்" என்பது போந்தது.இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.
Transliteration:
pu'rappaddup pukkuth thirikin'ra vaayuvai
:ne'rippada u'l'lae :ninmala maakkil
u'ruppuch sivakkum uroamang ka'rukkum
pu'rappaddup poakaan purisadai yoanae
Translation:
The breath within rises
And wanders as it lists;
Control that and purify within;
Then shall your limbs glow red
Your hair turn dark
And God within shall leave you never.
No comments:
Post a Comment